search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே கேட்"

    • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

    இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

    ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

    இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

    தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே கேட் உள்ளது.

    இது திருவொற்றியூர் மேற்கு பகுதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இடம் ஆகும். தினந்தோறும் சுமார் 60 முதல் 70 ரெயில்கள் வரை இந்த பாதை வழியாக செல்வதால் பெரும்பாலும் மூடிகிடக்கும். இதனால் இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபக்கத்திலும் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போது ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தெடர்ந்து விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடி செலவில் 343 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. 1½ ஆண்டுகளில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
    • ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்பொழுது இரட்டை ரெயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கிராசிங் பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரெயில்வே கேட்டை மூடிவிட்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள தண்டவாள பகுதிகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ள இடத்தில் நவீன மயமாக்கப்படும் வகையில் ரப்பர் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ரப்பரைஸ்ட் சீட்டுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது தண்டவாளங்கள் அமைக்கப்படும் பகுதியில் சிமெண்ட் கற்களுக்கு பதிலாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே கேட் பகுதிகளில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகின்றன.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட், ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குலசேகரன் புதூர் பகுதியில் ரெயில்வே கேட்டில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு அதற்கான பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    2 நாட்களுக்குள் அந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கோதைகிராமம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற ரெயில்வே கேட்களிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் கன்னியாகுமரி-நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிக்காக பல்வேறு ரெயில்வே கேட்டுகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிமெண்ட் கற்களை அப்புறப்படுத்தி விட்டு அந்த பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் நாகர்கோவில்-திருவனந்த புரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3-வது கேட்டாக குலசேகரன்புதூர் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. மற்ற ரெயில்வே கேட் பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படும்.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் அகற்றப்பட்டு ரப்பரைஸ்ட் சீட்டுகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கேட்டில் பணி மேற்கொள்வதற்கு 2 நாட்கள் ஆகும். அந்த நேரங்களில் அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று காலை தொடங்கியது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம், பருவக்குடி வழியாக ராஜபாளையம் பிரதானசாலையில் செல்லும். அதேபோல் ராஜபாளையம், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வந்து அங்கிருந்து அச்சம்பட்டி சாலை சென்று வேல்ஸ் மெட்ரிக் பள்ளி, வடக்குப்புதூர் வழியாக பஸ் நிலையம் வந்து செல்லும். மாலை 6 மணிக்கு மேல் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும். எனவே பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது

    தென்தாமரைகுளம் :

    கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் 38 சதவீத மும், தமிழ்நாட்டில் 14 சதவீதம் நில ஆர்ஜி தம் முடிந்துள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று (21-ந் தேதி) மாலை. 4.30 மணி அடைக்ககப்பட்டது இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப் பட்டு இருக்கும்.

    எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லு மாறு அங்கு வைக்கப் பட்டுள்ள அறி விப்பு பலகையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வேகேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.

    இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழி யாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக கன்னியாகுமரி மற்றும் கல்லூரி, பள்ளி களுக்கு செல்லும் வாக னங்கள், இருசக்கர வாக னங்கள் மாற்று வழியாக. அகஸ்தீஸ்வரம், மாடு கட்டிவிளை சரவணன் தேரி, சுக்குப்பாறைதேரிவிளை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்களும், கன்னியா குமரிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி குள்ளாகியுள்ளனர். 

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் நான்கு வழி சாலையிலேயே ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான வாகனங்கள்

    இதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையானது நெல்லை- தென்காசி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

    இந்நிலையில் முறையாக சர்வீஸ் சாலைகள் எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலையின் கழிவுகளை கொட்டி சர்வீஸ் சாலை அமைத்துள்ளதால் அவை சேரும் சகதியுமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இந்த சர்வீஸ் சாலைகளானது வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழை காலங்களில் வயல்வெளிகளில் தொழி அடித்திருப்பது போன்று சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு சாலையில் சென்றால் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    எனவே மெதுவாக பணிகள் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணி மற்றும் நான்கு வழி சாலை பணிகளில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 20 நிமிடங்களுக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
    • மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மண்டபம்

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ெரயில் மார்க்கமாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அயோத்தி, புவனேஸ்வர், ஓகா ஆகிய வட மாநிலங்களுக்கு வாராந்திர ெரயில்கள், திருப்பதிக்கு வாரம் 3 நாள், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு தினசரி ெரயில்கள், கோவை வாராந்திர ெரயில், கன்னியாகுமரிக்கு வாரம் 3 நாள் ெரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் விழா காலங்களில் பல்வேறு நகரங்க ளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ராமேசு வரத்திற்கு மட்டும் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    ெரயில்கள் இயக்கத்தின் போது ராமேசுவரம்- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி, இருமேனி ஆகிய 2 இடங்களில் ெரயில்வே கேட் மூடப்படு கிறது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், பிற நகரங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் வாகனங்கள் ெரயில்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கும் நிலை இதுநாள் வரை தொடர்கிறது. மதுரை- ராமேசுவரம் ெரயிலுக்கு கேட் மூடப்படும்போது இந்த வழித்தடத்தில் ெரயில் கடந்து செல்ல குறைந்த பட்சம் 10 நிமிடங்களாகிறது. அதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. அதைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்கும் அரசு பஸ்கள் பயண நேரத்தை ஈடுகட்ட எதிரெதிரே முண்டியடிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

    இரவு நேரத்தில் ராமேசுவரம்- சென்னை, மதுரை- ராமேசுவரம் ெரயில்கள் சந்திப்பிற்காக மூடப்படும் இந்த கேட் 20 நிமிடங்களுக்கு பின் திறக்கப்படுகிறது. அவசர சிகிச்சை ஆம்புலன்சுகள் சில நேரங்களில் சிக்குவதால் உயிருக்கு போராடுபவரின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, தாமதமாகும் சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.என். நாகேஸ்வரன் கூறுகையில், தற்போது பாம்பன் பாலத்தில் புதிய ெரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து ெரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பாசஞ்சர் ெரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதனால் தற்போது குறைந்த அளவு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் செல்கிறது. அதனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ெரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. பாம்பனில் புதிய ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு ெரயில் சேவைகள் தொடங்கிய பிறகு அனைத்து ெரயில்களும் ராமேசுவரம் வரை செல்லும். அப்போது காலை, மாலை நேரங்களிலும் அதிக நேரம் ெரயில்வே கேட் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது. மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கம்
    • மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.

    தென்தாமரைகுளம் :

    சந்தையடி ஊரில் 2ரெயில்வே கேட்டுகள் உள்ளது. இதில் ஒன்று சந்தை யடி ஊருக்குள் செல்லும் வழியிலும், மற்றொன்று கோட்டையடியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் சந்தையடியில் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சந்தையடி, இடை யன்விளை, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, மேலசந்தையடி, விஜயநகரி, கரும்பாட்டூர், கோட்டையடி ஆகிய பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.

    அந்த இடத்தில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (21-ந்தேதி) மாலை6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சந்தையடி ஊரில்உள்ள மற்றொரு கேட்டு அடைக்கப்படாததால் அந்த கேட் வழியாக வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் ஊர் மக்களின் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவிப்பு பலகை ரெயில்வே நிர்வாகம் சார்பில் வைக்க ப்பட்டுள்ளது.

    • தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி க்கொண்டு தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூகையூர் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ரெயில்வே கேட்டில் நின்ற கொண்டிருந்த லாரி பின்னால் வந்தது.

    லாரி ஓட்டுனர் பிரேக் போட முயற்சித்தும், லாரி நிற்காமல் பின்நோக்கி சென்றது. இதனைக் கண்ட சின்னதுரை, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார். லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிய மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. எகிறி குதித்ததில் சின்னதுரையும், அவரது தாயாரும் லேசான காயங்களு டன் உயிர்தப்பினர். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னிட்டு ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுரங்கப்பாதை ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் உள்ள 4 தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து தண்டவாளத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு நேற்று முதல் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இன்று காலையிலும் பணி நடந்தது. ராட்சத கிரேன் மூலமாக தண்டவாளங்கள் அகற்றப்பட்டு கர்டர் பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நாளைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்டர் பாலம் அமைக்கப்பட்டு ரெயில்வே தண்டவாளம் அமைத்து விட்டால் ரெயில் போக்கு வரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள முடியும்.

    தற்போது கர்டர் பாலத்திற்காக தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதையடுத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்து சேர்ந்தது.

    சென்னை, பெங்களூர், கோவை, ராமேசுவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த ரெயில் இன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே கேபின் பகுதிக்கு வந்தது.

    ஆனால் சுரங்கப்பாதை பணி காரணமாக அந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தொடர்ந்து 7.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.45 மணிக்கு சென்றடைந்தது.

    இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலும் வள்ளியூரில் 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.30 மணிக்கு வந்து சேரும். இன்று 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரெயில் அதிகாலையில் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் 4¾ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேர வேண்டிய சிறப்பு ரெயில் 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.15 மணிக்கு வழக்கமாக புறப்பட்டு செல்லும். இன்று 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணி கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    • சேலம் அணைமேடு ரெயில்வே கேட் மினி வாகனம் மோதி உடைந்தது.
    • இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     சேலம்:

    சேலத்தில் இருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக அரூர், பேளூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும் .

    காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரெயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரெயில்வே கேட் இருந்துவருகிறது.

    சேலம் - விருதாச்சலம் நெடுஞ்சாலை பிரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. ரெயில் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும், கேட் அடைக்கப்படும்போது இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

    இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ரெயில்வே கேட்டில் மினி வாகனம் மோதியது. இதனால் கேட் சேதமானது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்ததால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ×